திரு. எஸ். எஸ். பாரத்வாஜ் தனது இஞ்ஜினியரிங் படிப்பு முடித்து பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் (HAL) கம்பெனியில் 9 வருடம் மேற்பார்வையாளராக பணிபுரிந்துள்ளார். பின்னர் மும்பையிலுள்ள கப்பற்படையின் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் (Naval Dockyard). சீனியர் ஃபோர்மன் (Senior Foremen) பிராஸஸ் இன்ஜினியர் (Process Engineer) பதவியில் 13 வருடங்கள் பணிபுரிந்து. பின் பதவி உயர்வு பெற்று முடிவில் சீஃப் புரொடக்ஷன் கண்ட்ரோலராக (Cheif Production Controller) 3 வருடங்கள் விசாகப்பட்டினத்திலும் - 5 வருடங்கள் மும்பையிலும் ஆக மொத்தம் 30 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
பணிக்காலத்தில் இந்தியன் இன்ஸ்டிடியூஷன் ஆப் இண்டஸ்ட்ரியல் இஞ்ஜினியரிங் (தேசியக் கவுன்சில்) அமைப்பில் பல கௌரவப் பதவிகளும் ஏற்று முடிவில் உதவி சேர்மனாகப் பணிபுரிந்துள்ளார். அப்போது பல அரங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அளித்தும் உரையாற்றியும் உள்ளார். பல உயர்ந்த விருதுகளும் பெற்றுள்ளார். எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர்.