அனாமிகா என்ற சுதந்திர விரும்பி.
தன் தோழி சுஜாவின் வாழ்வில் ஏற்பட்ட துயரம் தீராத வடுவாக அவள் மனதில் தங்கிவிடுகிறது.
இந்தத் துயரத்தால் அனாமிகா தனக்குள் எழுப்பிக்கொள்ளும் சில சந்தேகங்கள், ரிதேஷுடனான அவளுடைய தாம்பத்திய வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கிறது.
தன் நேர்மையான காதலால் அவளை ஜெயிக்கும் நாயகன். மற்றவை கதையில்..!
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.